Our Feeds


Saturday, May 11, 2024

ShortNews Admin

மதவாச்சி துப்பாக்கிச் சூட்டில் பெண்


 மதவாச்சி மஹதிவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெணொருவர் காயமடைந்துள்ளார்.


துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெண் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


ஹெட்டவீரகொல்லேவ பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய பெணொருவரே காயமடைந்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று (10) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »