Our Feeds


Saturday, May 25, 2024

SHAHNI RAMEES

சந்தேக நபர் தொடர்பில் தகவல் தந்தால்.. - 20 இலட்சம் ரூபா சன்மானம்

 


தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபரொருவரை கைது செய்வதற்காகக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

 

ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட் என்ற 1978 ஆம் ஆண்டு பிறந்த குறித்த நபர் 5 அடி 6 அங்குலம் உயரம் உடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் தொடர்பில் தகவல் கிடைத்தால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 071-8591753, 071-8591774 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 20 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் எனவும் தகவல் வழங்கியவர் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் இரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »