Our Feeds


Monday, May 20, 2024

ShortNews Admin

விஜயதாச ராஜபக்ஷ, கீர்த்தி உடவத்தவுக்கு இடைக்கால தடை உத்தரவு...


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும், பதில் பொதுச் செயலாளராக கீர்த்தி உடவத்தவும் செயற்படுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி குறித்த தடையுத்தரவு ஜுன் மாதம் 03ம் திகதி வரை அமுலில் இருக்கும் என நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »