Our Feeds


Thursday, May 16, 2024

ShortNews Admin

எல்ல – வெல்லவாய வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

 

இன்று காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளை மாவட்டம் எல்ல வெல்லவாய வீதியை இன்று (16) மாலை 6 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது நாளை (17) காலை 6 மணி வரை வீதி தற்காலிகமாக மூடியிருக்கும் என
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கின்றது.

மலிதகொல்ல பிரதேசம் உட்பட பல பகுதிகளில் வீதி ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »