Our Feeds


Thursday, May 16, 2024

Zameera

ஜனாதிபதி தேர்தல் வர்த்தமானி ஜூலை மாதம் வெளியிடப்படும்


 ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அதன்படி, தனது அமைச்சின் கீழ் இவ்வருடத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.

பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் அவர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில்;

“ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. எனவே ஜூலை மாதத்திற்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த இடமளிக்கப்படாது. அரசாங்கம் போதிய நிதி ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளது. ஆனால் சில துறைகள் இன்னும் வேலை செய்யவில்லை..”

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »