இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஏப்ரல் 2024 இல் 9.6 வீதத்தால் அதிகரித்துள்ளது.
அதன்படி, மார்ச் 2024ல் 4.96 பில்லியன் டொலராக இருந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகளின் மதிப்பு, 2024 ஏப்ரலில் 5.43 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
நிதி பரிவர்த்தனை ஒப்பந்தத்தின் கீழ் சீனா வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.