டுபாயில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி
மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான ‘வெல்லே சாரங்க’வின் உதவியாளரொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.ஜா-எல, துடெல்ல பிரதேசத்தில் கொலைச் சம்பவம் ஒன்றிற்காக வந்த நபருக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டதாக அதிரடிப் படை குறிப்பிட்டுள்ளது.
ஜாஎல பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி, மத்துமகலை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், தற்போது டுபாயில் தங்கியிருக்கும் வெல்லே சாரங்க என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வியாபாரியின் வழிகாட்டுதலின் பேரில் 56 ரகதுப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு அடைக்கலம் கொடுத்தமை, கொலை முயற்சிக்கு உதவியமை, 02 கிராம் 70 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.