அதன்படி மே 9ஆம் திகதி முதல் மீண்டும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கும் என்று சுகாதாரத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
சுகாதார ஊழியர்கள் தொடர்பான பொருளாதார நீதிக்காக தயாரிக்கப்பட்ட தொழிநுட்ப அறிக்கையை அரசாங்கம் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் ஒப்புக்கொண்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மே மாதம் சம்பளத்தில் ஒரு பகுதி சேர்க்கப்படும் என்றும், மீதமுள்ள பகுதியை கொடுப்பது குறித்து நான்கு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தொடர்புடைய தொழில்நுட்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை கருத்திற்கொண்டு நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்வதற்கு பதிலாக மாகாண ரீதியில் போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சுகாதார சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, மே மாதம் 9ஆம் திகதி வடமத்திய மாகாணத்திலும், 13ஆம் திகதி மத்திய மாகாணத்திலும், 14ஆம் திகதி சப்ரகமுவ மாகாணத்திலும், 15ஆம் திகதி வடமேற்கு மாகாணத்திலும், தென் மாகாணத்தில் தசய, ஊவாவிலுள்ள அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களிலும் இந்தப் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கு உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி முதல் மீண்டும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சங்கங்கள் மேலும் தெரிவித்துள்ளன.