Our Feeds


Wednesday, May 15, 2024

ShortNews Admin

தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்த ஆண்டில் 264 புதிய

தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் ஒழிப்பு மையம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் நிரூபா பல்லேவத்த குறிப்பிட்டுள்ளார்.

“2023 ஆம் ஆண்டில், 1,580 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் புதிதாக கண்டறியப்பட்டவர்கள். அதாவது 1,520 புதிய நோயாளிகள். மேலும், இந்த நோயால் பாதிக்கப்பட்ட 1,580 குழந்தைகளில் 180 பேர் உள்ளனர்.

அதாவது 12% குழந்தைகள் 15 வயதுக்குட்பட்டவர்கள். 2024 முதல் காலாண்டில், 274 நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளோம். புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள் 264 பேர். 274 இல் 21 பேர், அதாவது 8%, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள். நோயைப் பரப்பும் திறன் அவர்களிடம் இல்லை. இந்த ஆண்டும், 8% மாற்றுத்திறனாளி தொழுநோயாளிகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம்”

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »