வைத்தியர்களுக்கான போக்குவரத்து மற்றும் கட்டுப்பாடற்ற கொடுப்பனவு அல்லது DAT கொடுப்பனவை தங்களுக்கும் 35,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரி, மாகாண மட்டத்தில் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு இன்று(21) மேல் மாகாணத்தில் தொடரவுள்ளது.
ஊவா மாவட்டத்தில் நேற்று(20) காலை 8 மணி முதல் 4 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களின் பணிகளும் பாதிக்கப்பட்டன.