இலங்கை பிரஜாவுரிமையை கொண்டிராத நிலையில், போலி ஆவணங்களை சமர்பித்து, இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தனது சட்டத்தரணியுடன், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் டயனா கமகே இன்று (21) முன்னிலையானார்.
இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணைகள் இடம்பெற்ற பின்னணியில், டயனா கமகேயிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை இடம்பெற்ற தருணத்தில், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு பிரசன்னமாகவில்லை.