Our Feeds


Wednesday, May 15, 2024

SHAHNI RAMEES

சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தேரர் கைது..!

 

களுத்துறை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு வெசாக் கூடுகள் தயாரிப்பதற்காக சென்ற 13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



களுத்துறை, மெனேரிதன்ன பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் வசிக்கும் 27 வயது தேரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.



பாதிக்கப்பட்ட சிறுவன் குறித்த சம்பவம் தொடர்பில் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ள நிலையில் சிறுவனின் பெற்றோர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.



இதனையடுத்து, சந்தேக நபரான தேரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இந்நிலையில், சந்தேக நபர் களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »