Our Feeds


Saturday, June 8, 2024

SHAHNI RAMEES

பிக்கு ஒருவர் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு...

 



வீடொன்றில் தங்கியிருந்த பிக்கு ஒருவர் தாக்கியதில்

முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கிரியுல்ல - கஜுலந்தவத்த மாரவில பிரதேசத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒருவர் காயமடைந்து வீடொன்றிற்குள் இருப்பதாக கிரியுல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காயமடைந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.


பின்னர், காயமடைந்தவர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கல்கொடவத்தை, மாரவில பிரதேசத்தில் வசிக்கும் 72 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


சந்தேக நபரான பிக்கு உயிரிழந்தவரின் உறவினர் என தெரிவிக்கப்படுகிறது.


சந்தேக நபர் விகாரை ஒன்றில் வசிக்காமல் மாரவில பிரதேசத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்ததும், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தற்போது குறித்த பிக்கு அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், கிரிஉல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »