Our Feeds


Sunday, July 28, 2024

Zameera

ஆறு மாதங்களில் 290 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்


 நடப்பாண்டின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 290 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்தார்.

 

மாதாந்தம் இவ்வாறான பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும், சிறுவர்கள் தொடர்பான அதிகளவான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பெறப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

குழந்தைகள் தொடர்பான முறைப்பாடுகளில் இரண்டாவது அதிகளவான முறைப்பாடுகள் கம்பஹாவிலிருந்தும் மூன்றாவது அதிகளவான முறைகள் குருநாகலிலிருந்தும் கிடைக்கபபெறுவாதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

சமீபத்தில், இரண்டு குழந்தைகளின் தந்தை ஒருவர் தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை ஊடகங்களில் தெரிவித்திருந்தார், அது குறித்து கேட்டபோது அவர் இந்த புள்ளிவிவரங்களை முன்வைத்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »