Our Feeds


Monday, July 29, 2024

Sri Lanka

மத்திய மாகாணத்தில் 2 ஆயிரம் சிறுவர்களுக்கு பாதிப்பு!


மத்திய மாகாணத்தின் கண்டி மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 2,142 சிறுவர்கள் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டுடன் மத்திய மாகாணத்தில் நிலவும் போசாக்கின்மை தொடர்பில் 2016ஆம் ஆண்டு 12ஆம் இலக்க தகவல் அணுகல் சட்டத்தின் பிரகாரம் மாகாண சுகாதார திணைக்களம் விடுத்துள்ள தகவலுக்கான கோரிக்கைக்கு வழங்கப்பட்ட தகவலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண சுகாதார சேவைத் திணைக்களம் வழங்கிய தகவலின்படி, மாகாணத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட 2,142 சிறுவர்கள் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,920 குழந்தைகள் ஓரளவு போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 27,812 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 970 குழந்தைகளும், மாத்தளை மாவட்டத்தில் 461 குழந்தைகளும், நுவரெலியா மாவட்டத்தில் 711 குழந்தைகளும் இனங்காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 7,626 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 3,716 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 4,588 பேரும் ஓரளவு போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 11,044 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 4,051 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 12,717 பேரும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கண்டி மாவட்டத்தில் அக்குறணை சுகாதார அதிகாரி பிரிவிலிருந்தும், 68 யட்டிநுவர சுகாதார அதிகாரி பிரிவிலிருந்தும், 67 மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல சுகாதார அதிகாரி பிரிவில் 61 மற்றும் வில்கமுவ சுகாதார அதிகாரி பிரிவு 61 இல் பதிவாகியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் அதிகளவான ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறுவர்கள் கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 89 பேரும் லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 84 பேரும் பதிவாகியுள்ளனர்.

இந்த புள்ளிவிபரங்களின்படி நுவரெலியா மாவட்டத்திலுள்ள சிறுவர்களுக்கு ஊட்டசத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »