Our Feeds


Monday, July 29, 2024

Admin

மூன்றாக பிளவுற்றது சுதந்திரக் கட்சி!



ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் மூன்றாக பிளவுப்பட்டு, மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கி வருதாக அறியமுடிகிறது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால தலைமையிலான குழு, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.

அத்துடன், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர ஆகியோர் தலைமையிலான குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான புதிய கூட்டணி ஆதரவு வழங்கும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தகவலை எதிர்வரும் 31ஆம் திகதி வெளியிடவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »