Our Feeds


Sunday, July 14, 2024

Admin

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு - இலங்கை அதிபர் ரனில் அதிர்ச்சி



அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிர்ச்சி தெரிவித்ததுடன், அவர் பாதுகாப்பாக இருப்பதாக அறிந்து நிம்மதியடைவதாக தெரிவித்துள்ளார்.


அரசியலில் இலங்கையர்களும் இவ்வாறான வன்முறைகளை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் சட்டங்களை பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.


ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »