Our Feeds


Friday, July 19, 2024

Sri Lanka

IS பயங்கரவாதம் வேறு, வஹாபிஸம் வேறு என்ற புரிதலின்றி நீதி அமைச்சர் பேசியுள்ளார் | அமைச்சர் விஜேதாசவுக்கு உலமா சபை பதில்



(எஸ்.என்.எம்.சுஹைல்)


வஹா­பிஸம் தொடர்­பாக பிழை­யான புரிதலுடன் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாஷ ராஜ­பக்ஸ பேசு­வ­தாக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை தெரி­வித்­துள்­ளது.


அத்­துடன், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புக்கும் இஸ்­லாத்­துக்கும் எவ்­வித தொடர்பும் இல்லை என்­பது தொடர்பில் தாம் ஏற்­க­னவே நீதி­ய­மைச்­ச­ருக்கு விளக்­க­ம­ளித்­தி­ருக்­கின்றோம் என்றும் ஜம்­இ­யதுல் உலமா தெரி­வித்­துள்­ளது.


கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற விவா­தத்­தின்­போது வஹா­பிஸம் தொடர்பில் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஸ கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.


இது குறித்து நாம் ஜம்­இய்­யதுல் உலமா சபை­யிடம் வின­வி­ய­போதே அதன் ஊடகப் பிரிவு இவ்­வாறு தெரி­வித்­தது.


இது தொடர்பில் மேலும் தெரி­வித்­த­தா­வது, 2016 ஆம் ஆண்டு நீதி­ய­மைச்­ச­ராக இருந்த விஜ­ய­தாஸ ராஜ­பக்­ஸவை (தற்­போதும் நீதி­ய­மைச்சர்) நாங்கள் சந்­தித்து ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்­புக்கும் இஸ்­லாத்­திற்கும் எவ்­வித தொடர்பும் இல்யை என்­பதை விளக்­கி­யி­ருந்தோம். அதில் இளை­ஞர்கள் இணை­வதை தடுக்க வழி­களை மேற்­கொள்­ளு­மாறு நாம் வலி­யி­றுத்­தினோம்.


அச்­சந்­திப்பு ஜம்­இய்­யதுல் உலமா மாத்­திரம் கலந்­து­கொண்ட சந்­திப்­பல்ல, முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­களும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.


இது விட­ய­மாக போதிய தெளி­வுகள் இல்­லாமல் ஐ.எஸ்.ஐ.எஸ்.தான் வஹாபிஸம் என்ற பிழையான புரிதலினால் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ அவ்வாறு பேசியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது. – Vidivelli

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »