எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சதொச ஊடாக தேங்காய் ஒன்று 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்காக பத்து இலட்சம் தேங்காய்கள் விடுவிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
“தேங்காய் உற்பத்தி தொடர்பாக அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் அமைப்பு உள்ளது.அரசு தோட்டங்களில் உள்ள தென்னை பொருட்களை நகர்ப்புற மக்களுக்கு 130 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மேலும், 220 ரூபாய் விலையில் இரண்டு இலட்சம் கிலோ கிராம் அரிசியை நாளொன்றுக்கு விடுவிப்பதற்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் இணங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.