Our Feeds


Wednesday, December 4, 2024

Sri Lanka

நிந்தவூர் மத்ரஸா அதிபர், விரிவுரையாளர்கள் பிணையில் விடுதலை | மத்ரஸாவுக்குள் நுழையவும் தடை



மாவடிப்பள்ளி பிரதேசத்தில் இடம்பெற்ற அனர்த்ததுடன் தொடர்புடைய நிந்தவூர் காசிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு புதிய நிர்வாக சபையை  நியமிக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் திங்கட்கிழமை  (02) உத்தரவிட்டுள்ளார்.

 

குறித்த  அரபுக் கல்லூரியின் தற்போதைய நிர்வாக சபையைக் கலைத்து விட்டு புதிய நிர்வாக சபையை உடனடியாக நியமிக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு நீதவான் டி. கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.

 

மாவடிப்பள்ளி பிரதேசத்தில் கடந்த 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அனர்த்தம் மாணவர்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்தமை  தெரிந்ததே.


இதனையடுத்து  குறித்த  அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் விரிவுரையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 

 

இவர்களில் அதிபர் மற்றும் விரிவுரையாளர் ஆகியோர் டிசம்பர் 2 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் ஏனைய இவரும்  பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

 

இவ்வாறான நிலையில் குறித்த அனர்த்தம் தொடர்பான விசாரணைகள் திங்கட்கிழமை   (02)  சம்மாந்துறை நீதிவான் டி. கருணாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிந்தவூர் காசிபூல் உலும் அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் விரிவுரையாளர் ஆகியோர் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.


மேலும் இவ்வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை குறித்த அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் விரிவுரையாளர் ஆகியோர் அரபுக் கல்லூரிக்கு செல்லக்கூடாது எனவும் நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »