Our Feeds


Wednesday, December 18, 2024

Admin

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் 2 கோடி பணமுள்ள வங்கிக் கணக்கு இடைநிறுத்தம்.



முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் சுமார் 20 மில்லியன் ரூபாய் சேமிப்புடனான நடப்புக் கணக்கு மற்றும் நிலையான வைப்புக் கணக்கு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.


ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் தொடர்பாக இரண்டு கணக்குகளும் ஏழு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இடைநிறுத்தம் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »