Our Feeds


Sunday, December 22, 2024

Zameera

சட்ட விரோத அகழ்வு பணி : மூவர் கைது

பழங்கால பொருட்களை  அகழும் நோக்கில் சட்டவிரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்ட   3 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் கனகபுரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (21) நடத்திய  சுற்றிவளைப்பின் போதே குறித்த  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22, 25, 37, வயதுடைய கெலன்பிந்துவெவ, வவுனியா, பலாங்கொடை மற்றும் வெயாங்கொடை பகுதிகளை வசிப்பிடமாக கொண்டவரக்ளென தெரிவிக்கப்படுகிறது


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »