Our Feeds


Wednesday, December 4, 2024

SHAHNI RAMEES

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றம்!




அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான

தீர்மானம் புதன்கிழமை (04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் செவ்வாய்க்கிழமை (03) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், புதன்கிழமை (04)  காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையும் இரண்டு நாள் விவாதமாக நடைபெற்றது.


ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கடந்த நவம்பர் 21ஆம் திகதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »