2024/25 மகா பருவத்தில் நவம்பர் 26 முதல் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்யும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கத் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலன்னறுவை மாவட்டத்தில் 6,239 விவசாயிகளுக்கு 9067.40 ஏக்கருக்கு 114 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.
மேலும், நுவரெலியா மாவட்டத்தில் பெய்த கனமழையால் நெல், பச்சை மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான பயிர் சேத இழப்பீட்டுத் தொகையை மதிப்பிடும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.