Our Feeds


Sunday, February 16, 2025

Sri Lanka

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் – ரணில் சந்திப்பு!

8ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது, முன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து அவர்கள் கவனம் செலுத்தினர், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டாண்மைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

கடல்சார் கூட்டாண்மை மாநாட்டிற்காக தற்போது ஓமானில் உள்ள விக்கிரமசிங்க, கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை தொடர்பான முக்கியமான பிரச்சினைகளை கையாள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »