கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களை பாதித்துள்ள வெப்பமான வானிலை மே மாதம் வரை தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.
இந்த நிலைமை காரணமாக நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படலாம் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இரத்தினபுரியில் அதிகபட்சமாக 36.6 செல்சியஸ் (°C) வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Wednesday, February 19, 2025
மே மாதம் வரை அதிக வெப்பம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »