Our Feeds


Friday, March 7, 2025

Admin

உள்ளுராட்சி மன்ற அதிகாரத்தையும் எங்களுக்கு வழங்கவும் - மஹிந்த ஜயசிங்க!


கடந்த பொதுத் தேர்தலை விட இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அதிக வெற்றியைப் பெறும் என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

“இந்த நாட்டு மக்கள் கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் சமூக மாற்றத்திற்காக ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளனர். எனவே அதற்கு அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் மேலும் அந்த தீர்மானத்தை முன்னெடுத்து செல்வார்கள் என்றே கூற வேண்டும்.

அதனால் யார் கூட்டணியாக இருந்தாலும் எங்களுக்கு பிரச்சனை இல்லை. கிராமத்தை உருவாக்குவதே எமது திட்டம் அதனை எங்களுக்கு கொடுங்கள் என குறிப்பிட்டார்.

இருப்பினும், எங்களுக்கு கிராம பலம் தேவை. ஏனெனில் உள்ளாட்சி என்பது ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான பல அன்றாட நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நிறுவனம் என்பதை நாம் அறிவோம்.

எனவே, அந்த நிறுவனங்கள் மோசடி, ஊழல், முறைகேடுகள் இன்றி திறமையாக செயல்பட்டால், நாட்டு மக்கள் தங்கள் உள்ளூராட்சி மூலம் செய்ய வேண்டிய பணிகளை நிறைவேற்ற முடியும்.

எனவே, நாட்டின் ஜனாதிபதி பதவியையும், பாராளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களையும் எமக்கு வழங்குவதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் திறன் எமக்கு உள்ளது” என்றார்.

கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ஜயசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »