Our Feeds


Monday, March 10, 2025

Sri Lanka

கிழக்கில் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் Dr.றயீஸ் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கின்றார்!


இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய தீவிரவாத குழுவுடன் தொடர்புவைத்திருக்கின்றார் என அதிகாரிகள் சந்தேகிக்கும் மருத்துவர் ஒருவர் தன்மீதான சந்தேகங்களை நிராகரித்துள்ளார்.

தனக்கு வன்முறை நோக்கம் உள்ளதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள அவர் தான் சட்டத்தை மீறியிருந்தால் அரசாங்கம் தன்னை கைதுசெய்யலாம் என தெரிவிக்கின்றார்.

அவர் தீவிரவாதம் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் ஆனால் அந்த பகுதி மக்கள் அவரும் அவரை பின்பற்றுபவர்களும் வழக்கத்திற்கு மாறான கருத்துக்களை கொண்டுள்ளனர் இது அப்பகுதியில் உள்ள முக்கிய முஸ்லீம் குழுவுடன் மோதலிற்கு வழிவகுத்துள்ளது என தெரிவிக்கின்றனர்.

2019 ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த பகுதி அதிகாரிகளின் கவனத்தின் கீழ் வந்துள்ளது.

கல்முனை வடக்கு மருத்துவமனையில் உள்ள மனநல பிரிவின் மருத்துவர் கல்முனையில் சுப்பர் முஸ்லீம்கள் என்ற குழுவிற்கு தலைமை தாங்குவதாக தெரிவிக்கப்படுவதை மறுத்தார்.

(SHIHAR ANEEZ)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »