இந்தியாவின் டெல்லியில் பலமாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் முஸ்தபாபாத் நகரில் இருந்த பலமாடி கட்டடம் ஒன்று இன்று அதிகாலை திடீரென சரிந்து விழுந்ததில் கட்டடத்தின் உள்ளே ஏராளமானோர் சிக்கியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு படை, மற்றும் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டபோது இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.
இதேவேளை மோப்ப நாய்களின் உதவியுடன் கட்டடத்தினுள் சிக்கியவர்களை கண்டுபிடிக்கும் மீட்பு பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன
கட்டடம் எதனால் இடிந்து விழுந்தது உள்ளிட்ட எந்த விவரங்களும் இதுவரை தெரியவில்லை. விசாரணை தொடங்கி உள்ளதாகவும், விரைவில் அதுபற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.