Our Feeds


Monday, April 28, 2025

Zameera

நுவரெலியாவில் கடும் மழை: வெள்ளப்பெருக்கு மற்றும் பாதிப்புகள்


நுவரெலியாவில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால­நிலை கார­ண­மாக தொடர்ச்­சி­யான பிற்பகல் நேரத்தில் கன மழை பெய்து வரு­கின்­றது. 


இன்று (28) திங்கட்கிழமை பெய்த மழையால் பெரும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ள­துடன், பல்வேறு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.


தொடர்ந்து பெய்து வரும் அடை­மழை கார­ண­மாக நுவரெலியாவில் அதிகமான தாழ்­நிலப் பகு­திகள் முற்­றாக மூழ்­கி­யுள்­ளன.


அத்­துடன், பிர­தான வீதிகள் சில மழை நீரினால் நிரம்­பி­யுள்­ள­துடன், நுவரெலியா பதுளை பிரதான வீதியில் சிபெட்கோ எரிபொருள் நிலையத்திற்கு முன்பகுதி வெள்ளத்தில் மூழ்கியதால் போக்­கு­வ­ரத்து சில மணித்தியாலயத்திற்கு மேல் முற்­றாக துண்­டிக்­கப்­பட்­டது.


இதே­வேளை நுவரெலியா - உடப்புசல்லாவ நுவரெலியா ஹட்டன் பிர­தான வீதி­களின் போக்­கு­வ­ரத்தும் முற்­றாக பாதிக்­கப்­பட்­டது.


மேலும் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெஸ்போட் , கிளாரண்டன் ,கிரிமிட்டி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழைக்காரணமாக வெள்ளம் ஏற்பட்டதால், பிரதான வீதிகளும் அதிக குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன


இதில் குறிப்பாக அதிக மழை வீழ்ச்சி கார­ண­மாக நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதில் நுவரெலியா – கந்தபளை பகுதிகளில் கடும் மழை காரணமாக பெருமளவான மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.


மேலும் நுவரெலியா பிரதான நகரில் வர்த்தக நிலையங்களில் வெள்ள நீர் புகுந்ததால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது , 


அத்தோடு, தோட்டங்களை அண்டிய வீடுகளுக்கும் வெள்ள நீர் புகுந்ததையும் காணக்கூடியதாக உள்ளது பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »