அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட தீர்வை வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கை தூதுக்குழு ஒன்று கடந்தவாரம் அமெரிக்காவிற்கு புறப்பட்டது.
நேற்று நடந்த இந்தக் கலந்துரையாடலானது வெற்றிகரமாக நிறைவுற்றதாகவும் இது தொடர்பான முடிவுகள் விரைவில் அறிக்கையாக வெளியிடப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.