Our Feeds


Wednesday, May 28, 2025

SHAHNI RAMEES

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் கிரிக்கெட் வீரர் செஹான் மதுசங்கவுக்கு விளக்கமறியல்!

 

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் செஹான் மதுசங்கவை எதிர்வரும் ஜூன் மாதம் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  குளியாப்பிட்டிய நீதவான் ரன்திக்க லக்மால் ஜயலத் திங்கட்கிழமை (26) உத்தரவிட்டுள்ளார். 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் செஹான் மதுசங்கவின் வீட்டில் போதைப்பொருள் இருப்பதாக பன்னல பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 


இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் செஹான் மதுசங்கவின் வீட்டில் இருந்து 2 கிராம் 350 மில்லிகிராம் ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது,

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட செஹான் மதுசங்க குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவின் கீழ் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், செஹான் மதுசங்க மீண்டும் நீதிமன்றில்  ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் ஜூன் மாதம் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »