Our Feeds


Sunday, June 1, 2025

Zameera

வீடமைப்பு கண்காட்சியை பார்வையிட்டார் ஜனாதிபதி


 இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 20ஆவது சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிட்டுள்ளார். 

 
கொழும்பில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பமாகிய இந்த கண்காட்சி, நாளை வரை இடம்பெறவுள்ளது. 
 
சுமார் 280 காட்சிக் கூடங்களைக்கொண்ட இந்தக் கண்காட்சியானது, வீடமைப்பு மற்றும் நிர்மாணத் துறையில் முக்கிய தரப்பினர்களை ஒன்றிணைக்கும் ஒரு தளமாகும். 
 
இதன் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும், வர்த்தக வாய்ப்புகளைப் பெறவும், புதிய நிர்மாணங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப முறைகள் பற்றிய புரிதலைப் பெறவும் கண்காட்சியாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இம்முறை கண்காட்சியை பார்வையிடுவதற்காக, 30,000க்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தருவர் என்று எதிர்பார்க்கப்படுவதோடு பல்வேறு நாடுகளின் காட்சிப்படுத்தல் கூடங்களில் பல வகை பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் நுகர்வோருக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »