Our Feeds


Wednesday, June 18, 2025

Sri Lanka

கொலன்னாவ நகர சபையும் திசைகாட்டி வசம்!



கொலன்னாவ நகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

இன்று (18) காலை கூடிய கொலன்னாவ நகர சபைக்கான தலைவர் தேர்தலின் போதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

கொலன்னாவ நகர சபையில் தேசிய மக்கள் சக்திக்கு 9 ஆனங்களும், எதிர்க்கட்சிக்கு 10 ஆசனங்களும் கிடைத்தன.

இருப்பினும், எழுந்த பதட்டமான சூழ்நிலையை அடுத்து, 9 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறிய நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற சுசில் குமார, சபையில் தொடர்ந்து இருந்து தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவைத் தெரிவித்தார். 


அதன்படி, நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 10 வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் தம்மிக்க விஜயமுனி கொலன்னாவ நகர சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »