மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இன்று (25) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த துப்பாக்கி சூட்டில் 25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. மித்தெனிய பொலிஸாருடன் இணைந்து மூன்று விசேட விசாரணைக் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.