Our Feeds


Sunday, June 15, 2025

Sri Lanka

நாடு திரும்பினார் ஜனாதிபதி!



ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (15) காலை நாடு திரும்பியுள்ளார். 

இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் சென்றிருந்த வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் ஆகியோரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். 

ஜெர்மனிய ஜனாதிபதி பிராங்க்-வோல்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதியும் அவரது குழுவினரும் கடந்த 11 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »