Our Feeds


Friday, June 20, 2025

Sri Lanka

காலி மாநகர சபை தேசிய மக்கள் சக்தி வசம்!



பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தி (NPP) காலி மாநகர சபையை கைப்பற்றி தன் மேயரையும் நியமித்தது.


முதல் கூட்டத்தொடரில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பு மூலம் எதிர்ப்பு இன்றி அவர் மேயராக தெரிவானார்.

உள்ளூராட்சி தேர்தலில் 36 உறுப்பினர்களைக் கொண்ட மாநகர சபையில் NPP 17 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்த போதிலும், ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு 19 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் மேயர் பதவியை அவர்கள் கைப்பற்றினர்.

ஒரு வாக்கு நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையில், SJB, UNP, மற்றும் SB ஆகியவற்றைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தொடரிலிருந்து வெளியேறினர், இதனால் அவையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

மறுபுறம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர் பிரியந்த சஹபந்து மற்றும் நிஹால் மஹாவித்தனவால் பரிந்துரைக்கப்பட்டு, உறுப்பினர் சம்பிகா ஹிமாலியால் வழிமொழியப்பட்டு, எதிர்ப்பின்றி பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டார்.a

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »