Our Feeds


Thursday, July 3, 2025

Admin

மேர்வின் சில்வாவிற்கு பிணை!


முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூன்று பேரை தலா 25 மில்லியன் ரூபாய் சொத்துப் பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் விடுவிக்க கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.கே.டி. விஜேகோன் இன்று (03) உத்தரவிட்டுள்ளார்.

கிரிபத்கொடையில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து தனியார் ஒருவருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »