Our Feeds


Thursday, July 3, 2025

SHAHNI RAMEES

சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் ஷானி அபேசேகர!

 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர இன்று வியாழக்கிழமை (03) உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். 

இதற்கு முன்னரும் ஷானி அபேசேகர  இதே பதவியை வகித்து வந்த நிலையில், அரசியல் பழிவாங்களால் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்,  மீண்டும் அவருக்கு குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது.


இந்த நியமனத்திற்கு முன்னர், ஷானி அபேசேகர  குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் பணிப்பாராக பதவி வகித்தார், அங்கு அவர் மூலோபாய புலனாய்வு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »