Our Feeds


Friday, July 25, 2025

Sri Lanka

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் - பாராளுமன்றில் பிரதமர் உறுதி!


2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களில், தற்போதைய அரசாங்கத்தில் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் யாரேனும் இருந்தால், அவர்களுக்கு எதிராகவும் சட்டம் தவறாமல் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார்.

இன்று (25) பாராளுமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதிலளிக்கும் போது, பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »