Our Feeds


Monday, July 7, 2025

Sri Lanka

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்


முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் பதில் பொலிஸ் மா அதிபரிடமும் புகார் அளித்துள்ளார்.

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு கடந்த 5 ஆம் திகதி டுபாயில் இருக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரிடமிருந்து பல அழைப்புகள் வந்தன.

அங்கு அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பொது பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது நாட்டை விட்டு தப்பிச் சென்ற பாதாள உலகத் தலைவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களை மீண்டும் அழைத்து வர தேவையான உத்தரவுகளை அறிவிக்கும் போதே டிரான் அலஸ் இந்த கொலை மிரட்டலை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் விசாரித்த போது.

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இது தொடர்பாக தன்னிடம் புகார் அளித்ததாக அவர் கூறினார்.

அதன்படி, சம்பவம் குறித்து அனைத்து துறைகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »