Our Feeds


Sunday, July 20, 2025

Zameera

மீன் பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி மாயம்


 நிக்கவெரட்டிய பகுதியில் உள்ள மாகல்ல ஏரியில் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இரண்டு பேரில் ஒருவர் ஏரியில் விழுந்து காணாமல் போயுள்ளார். 


குறித்த நபர் நீரில் மூழ்கியதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நிக்கவெரட்டிய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

நிக்கவெரட்டிய பகுதியைச் சேர்ந்த 48 வயதான நபரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். 

காணாமல் போன நபரைத் தேடும் நடவடிக்கையில் நிக்கவெரட்டிய பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்களும் ஈடுபட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »