Our Feeds


Thursday, August 21, 2025

Zameera

நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாங்கள் நிச்சயமாக தோற்கடிப்போம்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாங்கள் நிச்சயமாக தோற்கடிப்போம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

159 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே குடும்பம் போன்றவர்கள். குடும்பமாகக் கருதப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களை எந்த நேரத்திலும் நாங்கள் கைவிட மாட்டோம்.

 

இவ்வளவு காலமாக பாம்பு போன்று இருந்த எதிர்க்கட்சியில் உள்ள அனைவரும் இன்று ஒன்று கூடி அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்கிறார்கள். நாங்கள் பலமாக இருக்கிறோம். எங்களை வீழ்த்த முடியாது.

 

எங்களுக்குள் பிரச்சினைகள் இருப்பதாக நீங்கள் ஒவ்வொருவரும் சொன்னாலும், நாங்கள் ஒன்றாக வேலை செய்கிறோம். எதிர்க்கட்சிக்குள் பல நெருக்கடிகள் இருப்பதாகவும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மட்டக்களப்பின் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெற்றுள்ளது.

 

இதுவரை, அந்த துறைமுகத்தில் 250 படகுகளை மட்டுமே நிறுத்த முடியும். மீன்பிடித் துறைமுகத்தை மேலும் விரிவுபடுத்தி, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன்பிடி படகுகளையும் நிறுத்தக்கூடிய அளவிற்கு அதை மேம்படுத்த நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.
 

-கொழும்பு நிருபர் க்ளின்டன்-

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »