Our Feeds


Monday, August 11, 2025

Zameera

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகை ரத்து சட்டமூலம்;எதிர்ப்பு மனுத் தாக்கல்


 முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்வதற்காக அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை இலங்கை பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா சமர்ப்பித்தார்.

இந்த வழக்கில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் (07), நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைச் சட்டத்தை ரத்து செய்யவும், முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது மனைவிகள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை ரத்து செய்யவும் கோரும் ஜனாதிபதி உரிமைகள் (ரத்து) சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

ஜூலை 31, 2025 வெளியிடப்பட்ட வர்த்தமானியில் இந்த முன்மொழியப்பட்ட சட்டம், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவைகளுக்கான உத்தியோகபூர்வ குடியிருப்புகள், மாதாந்திர கொடுப்பனவுகள், செயலக உதவி, போக்குவரத்து வசதிகள் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகளை முடிவுக்குக் கொண்டுவரும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »