Our Feeds


Thursday, October 9, 2025

Zameera

பெக்கோ சமனின் மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு


 தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியின் விளக்கமறியல் அக்டோபர் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, இந்த உத்தரவை, வியாழக்கிழமை (09) பிறப்பித்தார்.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில் அல்லாமல், கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், பணமோசடி தொடர்பாக சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதவான் குறிப்பிட்டார்.

சந்தேக நபருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பாக நடந்து வரும் விசாரணைகள் குறித்த முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் மேலும் உத்தரவிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »