Our Feeds


Wednesday, October 29, 2025

Zameera

ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு


 பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.



ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டன் செல்ல அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டது.


அதன்படி, ஒகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறைக்கு வாக்குமூலம் அளிக்க வந்த முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அதன் பின்னர் அவர் ஒகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.


முன்னாள் ஜனாதிபதி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதியை தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று பிணைப் பத்திரங்களில் விடுவிக்க கோட்டை நீதவான்நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டார். மேலும், வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »