Our Feeds


Saturday, November 29, 2025

SHAHNI RAMEES

ராஜாங்கனையில் வௌ்ளத்தில் சிக்கிய 33 பேர் மீட்பு..

 

ராஜாங்கனை கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 33 பேரை ஹெலிகொப்டர் மூலம் விமானப்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். 

இன்று காலை (29) வேளையில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கை விமானப்படை மீட்பு குழுவினர் எம்ஐ-17 ஹெலிகாப்டர் மூலம் வௌ்ளத்தில் சிக்கியிருந்தவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டதுடன் அவர்கள் அநுராதபுரம் விமானப்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »