Our Feeds


Thursday, November 13, 2025

Zameera

சட்டவிரோதமாக தமிழகம் சென்ற இலங்கையர் கைது


 இந்திய எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் உட்பிரவேசித்த இலங்கை பிரஜை ஒருவரை மண்டபம் கடற்கரை பொலிஸார் இன்று (13) கைது செய்துள்ளனர். 


தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கைதானவர் மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர் படகு மூலம் சட்டவிரோதமான முறையில் இந்திய எல்லைக்குள் உட்பிரவேசித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

-மன்னார் நிருபர் லெம்பட்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »