இனங்களுக்கிடையே வெறுப்பையும் முரண்பாட்டையும் தோற்றுவிப்பதாகக் கூறி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
இனங்களுக்கிடையே வெறுப்பையும் முரண்பாட்டையும் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் அவரை உடனடியாகக் கைது செய்து, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் கீழ் வழக்குத் தொடருமாறு கோரி, பிவிதுரு ஹெல உறுமய கட்சியினரால் இன்று (2026.01.19) கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
பிவிதுரு ஹெல உறுமயவின் இளைஞர் செயலாளர் குமார ராஜரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அந்த முறைப்பாடு பின்வருமாறு:
