Our Feeds


Thursday, February 12, 2026

Zameera

பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து: ஊழியர் ஒருவர் காயம்


 கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியம்பலம பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அதன் ஊழியர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (11) நண்பகல் இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர் மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவராவார்.

பின்னர் கட்டுநாயக்க பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »